
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்பவுலிங்கில் அசத்த, ஆஸ்திரேலிய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துதிணறல் துவக்கம் கண்டது. இங்கிலாந்து சென்றுள்ள ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட, ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்ட் \"டிராவில்\' முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. \"டாஸ்\' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டிராஸ் (161), பிராட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது.முதல் இன்னிங்சை தொடர்ந்த ஸ்டிராஸ் (161), பிராட் (16) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினர்.
அடுத்து வந்த சுவான் (4) நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின்னர் இணைந்த ஆண்டர்சன், ஆனியன்ஸ் ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது ஆண்டர்சன் (29) அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 425ரன்களுக்கு ஆல்-அவுட்டானாது. ஆனியன்ஸ் (17) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாசார்பில் ஹில் பென்ஹாஸ் 4, ஜான்சன் 3, பீட்டர் சிடில் 2 விக்கெட் வீழ்த்தினர். மழை குறுக்கீடு: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஹியுஸ் (4), கேப்டன் பாண்டிங் (2) இருவரும் வந்த வேகத்தில் ஆண்டர்சன் பந்தில் வெளியேறி ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 31ரன்கள் எடுத்து திணறியபோது, மழை குறுக்கிட ஆட்டம்ஒத்திவைக்கப்பட்டது. காடிச்(12), மைக்கேல் ஹசி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

வீரர்கள் விதிகளை மீறுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு. ஐ.சி.பி.,) தெரிவித்துள்ளது. பிரச்னையை தீர்த்து வைக்க அரசு தலையிட வேண்டும் என வீரர்கள் சங்கம், அந்நாட்டுஅதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சம்பள ஒப்பந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் வீரர்கள் சங்கம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் நடந்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை கிறிஸ் கெய்ல், சந்தர்பால், சர்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணித்தனர். இரண்டாம் நிலை வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் வெஸ்ட் இண்டீசை முதல் டெஸ்டில் வென்ற வங்கதேசம், இரண்டாம்டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்ற தயாராக உள்ளது.டபிள்யு. ஐ.சி.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், \"\"வீரர்கள் வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மறுத்தனர். வரும் 2010 \"டுவென்டி-20\' உலககோப்பை தொடர் டிக்கெட் அறிமுக விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. இது கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறுவதாக உள்ளது. இதுகுறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒவ்வொரு வீரருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்,\'\' என கூறியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங் கேற்ற வீரர்களுக்கான சம்பளம் குறித்து டபிள்யு.ஐ.சி.பி., துணைத் தலைவர் டேவ் காமரூன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\"\" வீரர்களுடன் கலந்துபேசி எந்த முடிவும் எடுக்கவில்லை.
இப்போதுவரை பழைய நிலையே தொடர்கிறது. இருந்த போதிலும் அவர்கள் பணிக்கு தகுந்து நாங்கள் சம்பளம் தருகிறோம்.இப்போது இங்கிலாந்து, இந்தியதொடருக்குரிய சம்பளத்தை தர இருக்கிறோம். வீரர்கள் விரைவில் இதனை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.இதுகுறித்து வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன் கூறுகையில், முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாதது குறித்து வீரர்கள் சார்பில்ஏற்கனவே தெரிவித்துள்ளோம். டபிள்யு.ஐ.சி.பி., உடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாத நிலையில் வீரர்களை எந்த விதிகளும், நிர்ப்பந்தமும் கட்டுப்படுத்தாது. இதுகுறித்து கயானா ஜனாதிபதி மற்றும் கரீபியன் கூட்டமைப்பு அரசின் தலைவர் பாரத் ஜக்டியோவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அரசு தலையிட்டு நெருக்கடியை தீர்த்து வைக்கும் என வீரர்கள் நம்புகிறார்கள், என்றார்.ஐ.சி.சி., சமரசம்?\"\"டபிள்யு.ஐ.சி.பி., வீரர்கள் பிரச்னையில் உடனயாக தீர்வு காணும் என தெரியவில்லை. இதுதான் கவலையாக உள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குஎங்களுக்கு வலிமையான அணி தேவை. டபிள்யு.ஐ.சி.பி., எங்களை தொடர்புகொண்டால் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க முயற்சிப்போம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது.