சாதனைகள் படைக்கும் போட்டியாக அமைத்த முதல் டெஸ்ட் போட்டி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் இரு அணி வீரர்களும் சாதனைகளை படைப்பதற்கு களம் அமைத்து கொடுத்த போட்டியாக நாம் இதனை கருதலாம். காரணம் இதில் பல சாதனைகளை இரு அணி வீரர்களும் படைத்துள்ளனர் அதாவது,

அஹமதாபாத்தில் நடைப்பெற்று வரும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 177 ஓட்டங்களை பெற்றதன் மூலம் 11000 ஓட்டங்களை கடந்துள்ளார். 135வது டெஸ்ட் போட்டியில் 234 வது இனிங்சில் விளையாடும் டிராவிட் சச்சின் டெண்டுல்கர், ஆலன் போர்டர், பிரைன் லாரா, பொன்டிங் ஆகியோருக்கு அடுத்ப்படியாக இவர் உள்ளார். இதன் மூலம் 27 சதங்களையும், 57 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.


திலகரட்ன தில்சான் 112 ஓட்டங்களை பெற்றதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 10வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இந்த ஆண்டில் இவர் பெறும் 5வது சதம் இதுவென்பதோடு இந்தியாவுக்கு எதிராக இவர் பெறும் முதலாவது சதம் இதுவாகும்.

இந்தியாவின் முதலாவது இனிங்சில் 6வது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட தோனி 110 ஓட்டங்களுடனும், 111 ஓட்டங்களுடன் 224 ஓட்டங்களை இனைப்பாட்டமாக பெற்றனர். மேலும் இலங்கையின் 2வது இனிங்சில் 4வது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட சமரவீர 70 ஓட்டங்களும், ஜேவர்த்தன 57 ஓட்டங்களும் பெற்றதன் மூலம் இனைப்பாட்டமாக 138 ஓட்டங்களை பெற்றனர்.


இருப்பினும் இதனை விடவும் சாதனை படைக்கும் இனைப்பாட்மாக பிரசன்ன - மகேலவின் இணைப்பாட்டம் (351 ) ஓட்டங்கள் காணப்படுகின்றது. பிரட்மனும், பிங்கில்டனும் 72 வருட காலம் தன் வசம் வைத்திருந்த இனைப்பாட்ட சாதனைi வரலாற்றை, 6வது விக்கெட்டுக்கான இனைந்துக் கொண்ட இவ் இரு வீரர்களும் அதனை முறியடித்துள்ளனர். இதுமட்டுமன்றி இந்த இணைப்பாட்டம் எந்த ஒரு அணியினாலும் இந்திய அணிக்கேதிராகப் பெறப்பட்ட மூன்றாவது பெரிய இணைப்பாட்டமாகும்.

இலங்கை அணி 2 வது இனிங்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையானது இந்திய மண்ணில் பெறப்பட்ட மிகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும் இதற்கு முன் இந்திய அணி 23 வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கெதிராக 676 ஓட்டங்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அத்துடன் இலங்கை அணியினால் வெளிநாடொன்றில் பெறப்பட்ட மிக கூடுதலான ஓட்ட எண்ணிக்கையும் இதுவென்பது குறிப்பிடதக்கது.



முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது சச்சின் டெண்டுல்கர் தனது 35 ஓட்டங்களை கடந்த போது, சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார். 160 டெஸ்ட் போட்டிகள், 436 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12,812 ஓட்டங்களும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 17,178 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே இவ்வாறான பல சாதனைகள் படைத்த வீரர்கள் இன்னும் இரு போட்டிகளில் பல சாதனைகளை படைப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இன்றைய போட்டியில்... இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 412 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது.

துடுப்பாட்டத்தில், கௌதம் கம்பீர் 114 ஓட்டங்களும், N~வாக் 51 ஓட்டங்களும் , ராகுல் ட்ராவிட் 38 ஓட்டங்களும், மி~;ரா ,24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காது சச்சின் டெண்டுல்கர் 100 ஓட்டங்களும், லகஸ்மன் 51 ஓட்டங்களும் பெற்றிருந்தனர்.


சச்சின் டெண்டுல்கர் இன்றைய நாள் ஆட்டத்தில் தனது 35 ஓட்டங்களை கடந்த போது, சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார். 160 டெஸ்ட் போட்டிகள், 436 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12,812 ஓட்டங்களும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 17,178 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸிற்காக 426 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 760 ஓட்டங்களையும் பெற்ற போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து இன்று 5வது நாள் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.

சச்சின் கூறிய ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கபில் தேவ்


ஒரு நாள் போட்டிகளை காப்பாற்றும் விதத்தில், சச்சின் கூறிய ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், முன்னாள் வீரர் கபில் தேவ். "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகளின் அசுர வளர்ச்சி காரணமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் போட்டிகளை மீட்க, புதிய பார்முலா ஒன்றை இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அறிவித்தார். இதன் படி,மொத்தம் உள்ள 100 ஓவர்களை, நான்கு பகுதிகளாக பிரித்து தலா 25 ஓவர் வீதம் போட்டிகளை நடத்தலாம். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என சச்சின் ஆலோசனை தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: டெஸ்ட், ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என கிரிக் கெட்டின் மூன்று பரிமாணங்களுக்கும் தனிப்பண்புகள் உண்டு. அவற்றை மாற்றி அமைத்து அதன் அடிப்படை தன்மையை குலைக்க வேண்டாம். இதனால் கிரிக் கெட்டின் பாரம்பரியமே பாதிக்கப்படும். கிரிக்கெட் போர்டுகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன் சிலும், கிரிக்கெட் வீரர்களும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் நடைமுறையை மாற்றுவது ஆபத்தானது. சச்சினின் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் பலரும், பலவிதமான ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் கிரிக்கெட்டுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கபில் தெரிவித்தார்.

ஐ.சி.சி., மறுப்பு: சச்சினின் ஆலோசனைக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) பெரிதாக எந்த "ரியாக்ஷனும்' காட்ட வில்லை. ஒரு நாள் போட்டிகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

ஆபத்து இல்லை: ஒரு நாள் போட்டிகளுக்கு ஆபத்து இல்லை என்கிறார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இது குறித்து அவர் கூறுகையில், "டுவென்டி-20' போட்டிகள், பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் ஒரு நாள் போட்டிகள் தரத்தை இழந்து விடவில்லை. உலககோப்பை (50 ஓவர்) போட்டிகளுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. டெஸ்ட், ஒரு நாள், "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உண்டு. டெஸ்ட் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் "டுவென்டி-20' போட்டிகள் பொழுது போக்கு நிறைந்தவை என்பதே எனது கருத்து,'' என்றார்.

ஜோன்ஸ் ஆதரவு: சச்சின் பார்முலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய ஆலோசனை தெரிவித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஒரு நாள் போட்டிகள் அழிவை நெருங்கிக் கொண்டுள்ளன. முதலில் 50 ஓவர் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்க வேண்டும். தவிர, தலா 20 ஓவர் வீதம் நான்கு இன்னிங்ஸ்களாக போட்டிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் விறுவிறுப்பை அதிகப்படுத்த முடியும்,'' என்றார்.

பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி "திரில்' வெற்றி


பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
பெர்குசன் அபாரம்: ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் வாட்சன் (46) நம்பிக்கை தந்தார். பின்னர் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஒயிட் ஜோடி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் கடந்த ஒயிட் (53) ரன் அவுட்டானார். கிளார்க் 45 ரன்கள் எடுத்தார். மைக்கேல் ஹசி (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பெர்குசன் அரைசதம் கடந்து அசத்தினார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பெர்குசன் (71), ஹோப்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

"டெஸ்ட்' போபரா: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (12) ஏமாற்றம் அளித்தார். படுமந்தமாக ஆடிய போபரா, 88 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு ஓவைஸ் ஷா (40) ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் கைகொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி திணறியது.ஒன்பதாவது வீரராக களமிறங்கிய ரஷித், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவருக்கு சைடு பாட்டம் ஓரளவுக்கு கைகொடுத்தார்.

6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பிராக்கனின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரஷித், அடுத்த பந்தில் பவுண்டரி அடித் தார். அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுக்கப் பட்டது. கடைசி 2 பந்தில், 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 3 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் (31), சைடு பாட்டம் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சச்சின், காம்ப்ளி இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தங்களது நட்பை புதுப்பித்தனர்


இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், காம்ப்ளி இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், காம்ப்ளி இருவரும் நீண்ட கால நண்பர்கள். தொடர்ந்து 26 ஆண்டுகளாக இவர்களது நட்பு தொடர்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தனியார் \"டிவி\' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காம்ப்ளி, \" கிரிக்கெட் அரங்கில் தான் வீழ்ச்சிப் பாதையில் பயணித்த போது, சச்சின் எனக்கு உதவ வில்லை\' என, தெரிவித்தார். இதனால் சர்ச்சை வெடித்தது. உடனடியாக இதை மறுத்த காம்ப்ளி, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தவிர, தான் சச்சினுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்றார். இப்பிரச்னை மீடியாவில் பெரிய அளவில் பரபரப்பான சமயத்தில், சச்சின் லண்டனில் இருந்தார்.

தற்போது இந்தியா திரும்பியுள்ள சச்சினை, காம்ப்ளி சந்தித்தார். தவிர, இருவரும் இணைந்து நாக்பூரில் நடந்த அவர்களது பயிற்சியாளர் ராமகன்ட் அச்ரேகருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர். இருவரும் ஒரே மேடையில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். இதன் மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. காம்ப்ளியின் பேட்டி குறித்து, கருத்து தெரிவிக்க சச்சின் மறுத்து விட்டார்.

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பவுலிங் அபாரம்


லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்பவுலிங்கில் அசத்த, ஆஸ்திரேலிய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துதிணறல் துவக்கம் கண்டது. இங்கிலாந்து சென்றுள்ள ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட, ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்ட் \"டிராவில்\' முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. \"டாஸ்\' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டிராஸ் (161), பிராட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது.முதல் இன்னிங்சை தொடர்ந்த ஸ்டிராஸ் (161), பிராட் (16) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினர்.

அடுத்து வந்த சுவான் (4) நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின்னர் இணைந்த ஆண்டர்சன், ஆனியன்ஸ் ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது ஆண்டர்சன் (29) அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 425ரன்களுக்கு ஆல்-அவுட்டானாது. ஆனியன்ஸ் (17) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாசார்பில் ஹில் பென்ஹாஸ் 4, ஜான்சன் 3, பீட்டர் சிடில் 2 விக்கெட் வீழ்த்தினர். மழை குறுக்கீடு: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஹியுஸ் (4), கேப்டன் பாண்டிங் (2) இருவரும் வந்த வேகத்தில் ஆண்டர்சன் பந்தில் வெளியேறி ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 31ரன்கள் எடுத்து திணறியபோது, மழை குறுக்கிட ஆட்டம்ஒத்திவைக்கப்பட்டது. காடிச்(12), மைக்கேல் ஹசி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

விதிகளை மீறும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் : அரசு தலையிட வலியுறுத்தல்


வீரர்கள் விதிகளை மீறுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு. ஐ.சி.பி.,) தெரிவித்துள்ளது. பிரச்னையை தீர்த்து வைக்க அரசு தலையிட வேண்டும் என வீரர்கள் சங்கம், அந்நாட்டுஅதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சம்பள ஒப்பந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

சமீபத்தில் வீரர்கள் சங்கம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் நடந்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை கிறிஸ் கெய்ல், சந்தர்பால், சர்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணித்தனர். இரண்டாம் நிலை வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் வெஸ்ட் இண்டீசை முதல் டெஸ்டில் வென்ற வங்கதேசம், இரண்டாம்டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்ற தயாராக உள்ளது.டபிள்யு. ஐ.சி.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், \"\"வீரர்கள் வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மறுத்தனர். வரும் 2010 \"டுவென்டி-20\' உலககோப்பை தொடர் டிக்கெட் அறிமுக விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. இது கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறுவதாக உள்ளது. இதுகுறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒவ்வொரு வீரருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்,\'\' என கூறியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங் கேற்ற வீரர்களுக்கான சம்பளம் குறித்து டபிள்யு.ஐ.சி.பி., துணைத் தலைவர் டேவ் காமரூன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\"\" வீரர்களுடன் கலந்துபேசி எந்த முடிவும் எடுக்கவில்லை.

இப்போதுவரை பழைய நிலையே தொடர்கிறது. இருந்த போதிலும் அவர்கள் பணிக்கு தகுந்து நாங்கள் சம்பளம் தருகிறோம்.இப்போது இங்கிலாந்து, இந்தியதொடருக்குரிய சம்பளத்தை தர இருக்கிறோம். வீரர்கள் விரைவில் இதனை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.இதுகுறித்து வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன் கூறுகையில், முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாதது குறித்து வீரர்கள் சார்பில்ஏற்கனவே தெரிவித்துள்ளோம். டபிள்யு.ஐ.சி.பி., உடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாத நிலையில் வீரர்களை எந்த விதிகளும், நிர்ப்பந்தமும் கட்டுப்படுத்தாது. இதுகுறித்து கயானா ஜனாதிபதி மற்றும் கரீபியன் கூட்டமைப்பு அரசின் தலைவர் பாரத் ஜக்டியோவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அரசு தலையிட்டு நெருக்கடியை தீர்த்து வைக்கும் என வீரர்கள் நம்புகிறார்கள், என்றார்.ஐ.சி.சி., சமரசம்?\"\"டபிள்யு.ஐ.சி.பி., வீரர்கள் பிரச்னையில் உடனயாக தீர்வு காணும் என தெரியவில்லை. இதுதான் கவலையாக உள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குஎங்களுக்கு வலிமையான அணி தேவை. டபிள்யு.ஐ.சி.பி., எங்களை தொடர்புகொண்டால் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க முயற்சிப்போம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்டிராஸ் அபார சதம்




ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், கேப்டன் ஸ்டிராஸ் சதமடித்து அசத்த, இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.இங்கிலாந்து சென்றுள்ள ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட, ஆஷஸ் தொடரில் பங்கேற் கிறது. கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. \"டாஸ்\' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில், முதல் டெஸ்டில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசருக்கு பதில், கிரகாம் ஆனியன்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் குக் சூப்பர் துவக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம் பார்த்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பீல்டிங்கில் ஏமாற்றிய ஆஸ்திரேலிய அணி ரன்களை வாரி வழங்கியது. முதல் விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில் குக் (95), சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ரவி போபரா (18) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் அபார மாக ஆடிய ஸ்டிராஸ் டெஸ்ட் அரங்கில் 18வது சதமடித்தார்.

இங்கிலாந்து அணி தேநீர் இடை வேளை யின் போது 2 விக்கெட் இழப் புக்கு 255 ரன்கள் எடுத்தி ருந்தது. ஸ்டிராஸ் (100), பீட்டர்சன் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.லார்ட்ஸ் டெஸ்டில் அம்பயராக செயல்படும் தென் ஆப்ரிக்காவின் ருடி கோயர்ட்சன், தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஸ்டீவ் பக்னர் (128 போட்டி) உள்ளார். தவிர, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், அதிகபோட்டிகளில் (201) அம்பயராக பணியாற்றிய ஒரே நபரும் கோயர்ட்சன் தான்.